"ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும்" - ஜெகன்மோகன் ரெட்டி உறுதி

ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் என்று புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் - ஜெகன்மோகன் ரெட்டி உறுதி
x
ஆந்திராவில் அனைவரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தப்படும் என்று புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் விழாவில் ஆந்திர முதலமைச்சராக அவர் பதவியேற்க உள்ளார். இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, தங்கள் கட்சி 25 மக்களவை தொகுதியிலும் 150 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்பது ஆந்திராவின் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் என குறிப்பிட்டார்.   இந்த வெற்றி தமது பொறுப்பை அதிகரித்துள்ளதாகவும், தம்மை நம்பி வாக்களித்த ஆந்திர மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்