" உழைத்த தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன் " - பிரதமர் மோடி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பணிவுடன் ஏற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பணிவுடன் ஏற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பாஜக தலைமை அலுவலக்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் கடினமாக உழைக்க இந்த வெற்றி உத்வேகம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் கூட்டாக உழைக்க வேண்டும் என பாஜக தொண்டர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.
Next Story