"அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்" - பசவராஜ்

அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.
அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் - பசவராஜ்
x
அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் குறைகளை முன்னிறுத்தி போராடி, உறுதியான எதிர்க்கட்சி என்று நிரூபிக்க வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறின்றி ஆட்சி கவிழும், பாஜக ஆட்சி மலரும் என்று கூறுவதிலேயே மும்முரமாக உள்ளதாக குற்றம்சாட்டினார். சித்தராமையா வரவேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களும், பாஜக வர வேண்டும் என எடியூரப்பாவும் ஆளாளுக்கு பேசுவதால், தேர்தலை சந்திக்கலாம் என்று தாம் கூறியதாக பசவராஜ் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்