"இலவச மருத்துவ சேவை திட்டம்" - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு

ஆந்திராவில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு, இலவச மருத்துவ சேவைக்கான அட்டை வழங்கப்படும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளர்.
இலவச மருத்துவ சேவை திட்டம் - ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் அறிவிப்பு
x
ஆந்திராவில் வருகின்ற 11 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதோடு பல்வேறு வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு திரட்டினார். அப்போது மாநிலத்தில் தற்போது கல்வி கட்டணம் அதிக அளவில் உள்ளதாக குறை கூறிய அவர் ,  தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்விக் கட்டணம் குறைக்கப் படும் என்று தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நபாயுடு மற்றும் அவரது உறவினர்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 5,000 ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு இலவச மருத்துவ சேவைக்கான அட்டை வழங்கப்படும் எனவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்