"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.
x
திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால்   கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றார். அதேபோல், மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்