நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது பாஜக

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையை வரும் 18ஆம் தேதி துவக்குகிறது.
x
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை வரும் 18ஆம் தேதி துவக்க பாஜக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வரும் 18ஆம் தேதி சென்னை வரும் பியூஸ் கோயல், அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும், வரும் 21-ம் தேதி அமித்ஷாவும், 24-ம் தேதி பிரதமர் மோடியும் தமிழக வரவுள்ளனர். தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சித் தலைவர்களிடம் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் கூட்டணியை முடிவு செய்து,  அதன் பிறகு தொகுதிகள் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் என டெல்லி பாஜக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும்  பாஜக - சுமன் சி ராமன் கருத்து 


நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பாஜக - மூத்த  பத்திரிக்கையாளர் மாலன் கருத்து 



Next Story

மேலும் செய்திகள்