ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
x
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆளுநர் உரை மீதான விவாததில் பேசிய ஸ்டாலின், மேகதாது அணை, அணை பாதுகாப்பு, மருத்துவ ஆணையம் என பலவற்றில் மத்திய அரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என ஸ்டாலின் குறிப்பிட்டார். குட்ட குட்ட குனிவதும், குனிய, குனிய குட்டுவதும் நியாயமல்ல என்றும், தட்டி கேட்க வேண்டிய நேரத்தில், கேட்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்