திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் - அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது வேண்டாம் என கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
x
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தற்போது  நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியரின் கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  அந்த தொகுதியின் இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க  மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அவசர அவசரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து  கொண்ட, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட  கட்சிகளின்  பிரமுகர்கள், தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.   இடைத்தேர்தல் தொடர்பான இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க  மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்