திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் - டி. ராஜா

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை டி.ராஜா சந்தித்து பேசினார்.
x
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக , இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கலந்து பின்னர் முடிவு செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார் கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் டி.ராஜா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்