பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்

லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்
x
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், பாரதியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்பவரிடமிருந்து லஞ்சப் பணத்தை துணைவேந்தர் கணபதி,  வாங்கியதை சுட்டிக் காட்டியுள்ளார். ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் பதிவு இருந்தும், 310 நாட்களாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என, அவர் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்