பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பாஜக அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களிப்பு
பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

* நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கியது. 

* விவாதம் தொடங்கிய சில மணி நேரங்களில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் விவாதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. 

* விவாதத்தின் மீது மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். காரசார விவாதம், பிரதமர் மோடியின் பதிலுரையை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 

* தீர்மானம் முதலில் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை தொடர்ந்து பொத்தானை அழுத்தி வாக்களிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. 

* வாக்கெடுப்பில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக 126 உறுப்பினர்களும், ஆதரவாக 325 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

* இதனால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 

* மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியான அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. 

* இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 294 உறுப்பினர்கள் உள்ளனர். வாக்கெடுப்பின் போது அதிமுக-வின் 37 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

* இதன்படி அரசுக்கு ஆதரவாக 331 வாக்குகள் பதிவாகி இருந்திருக்கும், ஆனால் 6 வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன. இதனால் பாஜக உறுப்பினர்களில் சிலர் தவறுதலாக மாற்றி வாக்களித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் வாக்கெடுப்பு என 12 மணி நேரம் இடைவேளை இல்லாமல் மக்களவை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்