18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: "ஆக. 15க்கு முன் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன், அமமுக

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: "ஆக. 15க்கு முன் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன், அமமுக
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக. 15க்கு முன் நல்ல தீர்ப்பு வரும் - தினகரன், அமமுக
x
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் ஆகஸ்ட் 15க்கு முன்பாக நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் ​​தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார். 

நாடு முழுவதும் ஒரே தேர்தல் எனும் திட்டம் போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது என குறிப்பிட்ட தினகரன், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டபூர்வமாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 



Next Story

மேலும் செய்திகள்