18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு - நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம்

தகுதி நீக்க வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு - நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம்
x
தங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  18  பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, கடந்த மாதம் மாறுபட்ட தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து 18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வரும் நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து  மர்மநபர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி சுந்தர் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்