மாடத்தை பார்த்தே பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ...காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்...
சட்டப் பேரவை மாடத்தில் அமர்ந்திருந்த மனைவியை அடிக்கடி பார்த்தபடி அமைச்சர் செல்லூர் ராஜூ,பதிலுரை அளித்தது குறித்து, சுவாரஸ்ய விவாதம் நடந்தது...
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லுார் ராஜூ ஆவேசமாக பேசிய படி மேலே உள்ள சபை மாடத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தார் . இதை கவனித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சிவாஜி கணேசன் அளவிற்கு அமைச்சர் பேசுவதற்கு காரணம், மாடத்தில் அவருடைய குடும்பத்தினர் அமர்ந்திருப்பது தான் என்றதும் சபையில் சிரிப்பொலி எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் , மனைவியே கண்கண்ட தெய்வம் என்ற அடிப்படையில் செயல்படும் செல்லூர் ராஜூவை பாராட்ட வேண்டும் என்றார் . அவர் உதாரண புருஷராக திகழ்கிறார் என ஜெயக்குமார் கூறியபோது சபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது....
Next Story