ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் மறியல் போராட்டம்
சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில், அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில், திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரான புகழேந்தி தலைமையில் அக்கட்சியினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீஸார், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காந்தி சாலை அருகே திமுக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில், அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
Next Story