கண்மூடி திறப்பதற்குள் சோகம்... ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - நொடி பொழுதில் பிரிந்த உயிர்

x

காசர்கோடு பைக்கம் பகுதியில், தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 இளைஞர்கள் மீது சரக்கு ரயில் மோதியதாக, அந்த ரயிலின் ஓட்டுனர், ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ரயிவே போலீசார், பைக்கம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே தேடியதில், 2 இளைஞர்களின் உடல்களை கண்டறிந்தனர். அவர்கள், நெல்லிக்குட்டா பகுதியைச் சேர்ந்த முஹம்மது சாஹிர் மற்றும் நிஹால் என்பது தெரிய வந்துள்ளது. திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து 4 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். செல்போன்களை திருடி விட்டு தண்டவாளத்தில் நடந்து சென்றபோது விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்