நாட்டையே அதிரவிட்ட உபி சம்பவம்.. அதிர்ச்சியில் இருந்து விலகாத யோகி - 237 மணமகள்கள் செய்த காரியம்

x

உத்தரப் பிரதேசத்தில் முதல்வரின் குழுத்திருமண திட்டத்தின் கீழ், ஜனவரி 25ஆம் தேதி பல்லியா மாவட்டத்தில் 568 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. இதில் மணமகன் இல்லாமல் ஏராளமான பெண்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியது. பலருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், 3 அரசு அதிகாரிகள், 12 இடைத்தரகர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணையில் 568 திருமணங்களில் 237 திருமணங்கள் போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி திருமணம் செய்தவர்களிடம் இருந்து, பொருட்கள் பணத்தை திரும்ப பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்