ஆண்டுக்கணக்கில் பகை..போர்களமான வீதி..2 குடும்பத்தில் 6 பலி..ரத்த ஆறாக மாறிய மொத்த கிராமம்

x

தியோரியா மாவட்டம் ஃபதேபூர் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே நில பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது... இன்று இருதரப்பிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு... செங்கற்களாலும், கூரிய ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். இதில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும், மறுபுறம் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்