பினராயி புறப்பட்டதும் காங்கிரசாரை புதருக்குள் புரட்டிய கம்யூனிஸ்ட் இளைஞர்கள்..ஹெல்மெட்டால் கொடூர அடி

x

பினராயி புறப்பட்டதும் காங்கிரசாரை புதருக்குள் புரட்டிய கம்யூனிஸ்ட் இளைஞர்கள்.. ஹெல்மெட்டை கொண்டு தலையில் கொடூர அடி

கேரள மாநிலம் கண்ணூரில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற இளைஞர் காங்கிரசாரை, கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள் சரமாரி தாக்கினர்.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் அனைத்து சட்டமன்ற தொகுதி மக்களையும் நேரடியாக சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்று காசர்கோட்டில் தொடங்கியது. மூன்றாவது நாளாக கண்ணூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லியாசேரி தொகுதி மக்களை, மாடாயிபாறை பகுதியில் பொதுமக்களை அமைச்சர்கள் சந்தித்து குறைகள் கேட்டனர். அங்கிருந்து அவர்கள் புறப்பட்டபோது, பழையங்காடி காவல் நிலையம் அருகே திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதை அறிந்து அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள், அவர்களை சரமாரி தாக்கினர்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்