நகைக்கடைக்குள் நுழைந்ததும் இளைஞர்கள் செய்த பகீர் செயல்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

x

திருப்பதி அருகே ரேணிகுண்டா, பாப்பா நாயுடுபேட்டை பகுதியில் உள்ள நகைக்கடைக்கு 3 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்தனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி கடை உரிமையாளரை மிரட்டினர். கடையில் இருந்த நகைகளுடன் பைக்கில் தப்பிக்க முயன்றபோது, கடையில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பினர். இதையடுத்து, கடைக்கு அருகில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள், 3 இளைஞர்களையும் பிடிக்க முயன்றனர். எனினும் இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிய நிலையில், ஒருவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தன​ர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் 3 பேரில் ஒருவன் ரேணிகுண்டாவை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய இருவரும் கடையில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டார்களா? எவ்வளவு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்