சந்திரபாபு நாயுடுக்கு திடீர்னு என்னாச்சு?.. தொண்டர்கள் அதிர்ச்சி.. ஆந்திராவில் பரபரப்பு

x

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இதயக் கோளாறு இருப்பதாக, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் அவருடைய தரப்பு வழக்கறிஞ தெரிவித்துள்ளார்.

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கோரி அவருடைய வழக்கறிஞர்கள், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, சந்திரபாபு நாயுடுவுக்கு இதய கோளாறுகள் இருப்பதால் அவர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக அவருடைய தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இருதய பரிசோதனை தொடர்பான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்