"இவர்கள் மூவரால் ஓராண்டு மல்யுத்த வாழ்க்கையை இழந்தோம்"...இளம் மல்யுத்த வீரர்கள் திடீர் போராட்டம்

x

டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளம் மல்யுத்த வீரர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆண்டை இழந்து விட்டதாகவும், அதற்கு சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோரே முக்கிய காரணம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த 3 பேருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், மூவரிடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்ற பதாகையையும் ஏந்தியபடி போராட்டம் செய்தனர். கடந்தாண்டு இதே பகுதியில், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து, மூவரும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்