இன்ஸ்டாவில் இளைஞருடன் நெருக்கமாக வீடியோ.. எச்சரித்த அண்ணன்... கண்டுகொள்ளாத தங்கை - கடைசியில் உலக்கையால் நேர்ந்த விபரீதம்

x

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வருவதை நிறுத்த கோரியும் கேட்காத தங்கையை, அண்ணன் உலக்கையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டம் பொல்லம்பள்ளே கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி என்ற அஜ்மிரா சிந்து. இவர் மஹ்பூபாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் வந்த நிலையில், சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் சங்கவி ரீல்ஸ் பதிவிட்டு வந்த நிலையில், இதை விரும்பாத சங்கவின் சகோதரர் ஹரிலால் தங்கையை கண்டித்துள்ளார். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் சங்கவி தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குமிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சங்கவியை ஹரிலால் உலக்கையால் அடித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர், மகள் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறி மூடி மறைக்க நினைத்த நிலையில், ஊர் மக்கள் போலீசில் புகாரளித்தனர். போலீசாரின் விசாரணையில் அனைத்தும் அம்பலமாக, ஹரிலாலை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்