வெறியோடு ஊருக்குள் நுழைந்த வேங்கை... ஹாயாக சுற்றிநின்று வேடிக்கை பார்த்த பப்ளிக் -வைரலாகும் வீடியோ

x

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்துக்குள் புலி புகுந்தது. கிராமத்தில் உள்ள சுவரில் புலி அமர்ந்த நிலையில், அதனை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று அச்சமின்றி வேடிக்கை பார்த்தனர். புலியைச் சுற்றி பாதுகாப்பு வலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் வைரலாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்