கேரளாவில் குறிவைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. அலறிய பயணிகள்

x

கேரள மாநிலம் சாகர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணூர் தலச்சேரி பகுதி அருகே ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது கல்வீச்சு சம்பவம் நடந்தேறியது. இதில் சி8 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே போலீசார், தொடரும் கல்வீச்சு சம்பவங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்