ஆயிரம் பேருக்கு வல்லசத்யா விருந்து - 300 சமையல் கலைஞர்கள் .. 40 வகை உணவுகள்

x

கேரள மாநிலம் ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் நடந்த வல்லசத்யா விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி அன்று வல்லசத்யா விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்தகோபன் துவக்கி வைத்தார். தொடர்ந்து 51 பள்ளியோடங்களில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மூலம் 300 சமையல் கலைஞர்களை கொண்டு விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடந்த விருந்தில் கோட்டயம் சென்னப்பாடியில் இருந்து கொண்டு வரப்பட்ட தயிர், அம்பலப்புழா பால் பாயசம் உள்ளிட்ட 40 வகையான உணவுகளை தேவசம் போர்டு மற்றும் பள்ளியோட சேவா சங்கத்தினர் பரிமாறினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்னர் சத்யா விருந்தில் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்