உ.பி. சிறையில் பிரபல தாதா மரணம்.. பகீர் கிளப்பும் மகனின் குற்றச்சாட்டு

x

உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் உயிரிழந்தார்...

கடந்த சில நாட்களுக்கு முக்தார் அன்சாரி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மாரடைப்பு காரணமாக முக்தார் அன்சாரி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முக்தார் அன்சாரியின் மரணத்தால் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அங்கு 144 தடை உத்தரவும் அமல் படுத்தப்பட்டுள்ளது. முக்தார் அன்சாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் முக்தார் அன்சாரியின் உடல் ஒப்படைக்கப்படும். இதனிடையே தமது தந்தையின் மரணத்துக்கு காரணம் சிறை உணவில் கலக்கப்பட்ட ஸ்லோ பாய்சன் என அவரது மகன் உமர் அன்சாரி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்