ரீல்ஸ் பெண்களே உஷார்..! நடுரோட்டில் ரீல்ஸ்... பைக்கில் வந்து செயின் அடித்த நபர் - வைரலாகும் வீடியோ

x

உத்தரபிரதேசத்தில், ரீல்ஸ் படப்பிடிப்பின் போது, நடந்து சென்ற பெண்ணிடம், பைக்கி வைந்த ஒருவர், தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிய, சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காசியாபாத்தில் ஒரு பெண், சாலையில் நடந்து சென்றவாறு ரீல்ஸ் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். அப்போது, எதிரே பைக்கில் வந்த ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த பெண்ணின் கழுந்தில் அணிந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்