வேரோடு சாய்ந்த மரம் - சுக்குநூறாக நொறுங்கிய சுற்றுலா படகு - கேரளாவில் அதிர்ச்சி

x

கேரள மாநிலம், ஆலப்புழாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சுற்றுலா படகு மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. கரையோரம் இருந்த படகு மீது பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இப்படகின் உரிமையாளர் அதனை இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் 16 லட்ச ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, அப்பகுதியில் உள்ள வலுவிழந்த மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்