தென்னிந்தியாவை புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

x

சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர்,

தென்னிந்தியாவை 'பாரதத்தின் கலாச்சார கோட்டை' என தெரிவித்தார். காசிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக, தென்காசியில் காசி விஸ்வநாதர் கோயிலை பாண்டியர்கள் கட்டினர் என்றும் அவர் பேசினார். மேலும் சிலர் இந்தியா ஒரு தேசம் அல்ல, தனித்துவமான மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தை பரப்புகின்றனர்... இதனால், இந்திய சூழலில் தேசியவாதம் பற்றிய புரிதல் இல்லாமையும், இந்தியா மீது ஆழ்ந்த வெறுப்பும் ஏற்படுகிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்