ஆடி மாத திருவிழாவில் அம்மனுக்கு தக்காளி மாலை - நாகையில் கோலாகலம்

x

நாகை அருகே மகா மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு 508 தக்காளியை மாலையாக அணிவித்து சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. காருக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயத்தில், ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம், பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தக்காளி விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இந்த தக்காளி, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்