5 டன் மலர்களால் பூத்து குலுங்கிய திருப்பதி!

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களை கவரும் வகையில், ஐந்து டன் மலர்களால் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகைகளான மலர்களைக் கொண்டு யானை, மயில், வாத்து போன்ற உருவங்களை செய்துள்ளனர். பல்வேறு புராணக் கதைகளை கூறும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலை தத்ரூபமாக அமைத்து, அதனுள் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமியை போன்று வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்