கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை தூக்கிச் சென்ற புலி...அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேட்டையாடிய கன்றுக்குட்டியின் உடற்பாகங்களை புலி தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள வாகேரி எனுமிடத்தில் தொழுவத்தில் இருந்த கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலி, உடற்பாகங்களையும் எடுத்து சென்றது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் இது பதிவான நிலையில், கேரள வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்