மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய தமிழர் வரலாற்றை பறைசாற்றும் இடம்

x

ஆதிச்சநல்லூரில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த சைட் மியூசியம் முழுமையாக சீரமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து கண்டறியப்பட்ட பொருள்கள் அனைத்தும், அதே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால், சைட் மியூசியம் சேதமடைந்தது. தற்போது அப்பகுதி முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்