காதலியோடு சேர்ந்து மாமூல் வசூல்..ஒன்றல்ல.. ரெண்டல்ல ரூ.30 கோடி - திருப்பதியை அதிரவிட்ட Ex CRPF வீரர்

x

திருப்பதி அருகே காதலியை போலீசாக நடிக்க செய்து, அவரோடு சேர்ந்து பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பெந்துர்த்தியை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ். சி.ஆர்.பி.எப்பில் இருந்த இவர் ஒழுங்காக பணியாற்றாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தநிலையில், தனது காதலியை போலீஸாக நடிக்க செய்த ஹனுமந்து ரமேஷ், அவரோடு சென்று பல இடங்களில் மாமூல் வசூலித்து வந்துள்ளார். மேலும் இருவரும், பொம்பை துப்பாக்கியை காட்டி பண பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, ரயில்வே, போலீஸ் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம், 3 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை விசாரித்த போலீசார், ரமேஷையும், அவரது காதலியையும் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்