கண்ணை மறைத்த அடர் பனிமூட்டம்..குடும்பத்தோடு ஏரிக்குள் பறந்த கார்..வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x
  • தெலங்கானாவில் அடர் பனி மூட்டம் காரணமாக சாலை எது ஏரி எது என்று தெரியாமல் காரை ஓட்டுநர் ஏரிக்குள் இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • ஐதராபாத்தில் இருந்து 1 பெண் உட்பட 5 பேர் கார் ஒன்றில் விகாராபாத் அருகே உள்ள அனந்தகிரி மலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்...
  • விகாரபாத் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவியது...
  • இதனால் சாலை சரியாக தெரியாத நிலையில் காரை ஓட்டியவர் விகாரபாத் அருகே உள்ள சிவாரெட்டி பேட்டை ஏரியில் காரை இறக்கி விட்டார்...
  • ஏரி நீரில் கார் பாதி மூழ்கிய நிலையில், தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காருடன் உள்ளே இருந்த பெண் உட்பட 4 பேரை பத்திரமாக மீட்டனர். காணாமல் போன மற்றொருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...

Next Story

மேலும் செய்திகள்