"சிலிண்டர்களை இலவசமாக கொடுத்தாலும் கொடுப்பார்கள்" - உத்தவ் தாக்கரே விமர்சனம்

x

மும்பையில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா முன்னால் முதல்வர் கள் உத்தவ் தாக்கரே மற்றும் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ரக்‌ஷா பந்தன் பரிசு எனக்கூறும் பிரதமர் மோடிக்கு, 9 ஆண்டுகளாக ஏழை சகோதரிகள் குறித்து நினைவு வராத‌து ஏன் என கேள்வி எழுப்பினார். மோடி அரசால் பல சலுகைகள் வழங்கப்படும் என்ற அவர், பாஜக அரசு கேஸ் சிலிண்டர்களை இலவசமாகவே வழங்கினாலும் வழங்கும் என்றார். எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதே ஒரே நோக்கம் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்