தீர்ப்பு கொடுத்த திருப்பம்... 2வது இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் காந்தி

x

மீண்டும் எம்பி பதவியை திரும்ப பெற்ற ராகுல் காந்தி இரண்டாவது நாளாக தனது சொந்த தொகுதியான வயநாட்டில், மக்களை சந்தித்து உரையாற்றினார். நேற்று வயநாடு சென்று அடைந்த அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தம்மை எவ்வளவு முறை தகுதி நீக்கம் செய்தாலும், மக்கள் உடனான தனது உறவு வலிமை அடைந்து கொண்டே தான் செல்லும் என அவர் கூறினார். தொடர்ந்து, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி, நாட்டின் உண்மையான உரிமையாளர்களான பழங்குடியினருக்கு நிலம் மற்றும் வனத்தின் மீதான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்