நடுவானில் குழந்தைக்கு நடந்த விபரீதம்... சக பயணிகள் செய்த செயல்.. உயிர் போய் உயிர் வந்த தருணம்

x

27ஆம் தேதி ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற விஸ்தாரா விமானத்தில், 14 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணம் செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 5 மருத்துவர்கள், குழந்தைக்கு முதலுதவி அளித்தனர். மூச்சு விடாமல் இருந்த குழந்தைக்கு, 45 நிமிடம் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், நாக்பூரில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அவசர ஊர்தி மூலம், கிம்ஸ் கிங்ஸ்வே குழந்தை நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, நினைவு இல்லாமல் ஆபத்தான குழந்தை உள்ள நிலையில், செயற்கை சுவாசக் கருவி மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்