ஊர்மக்கள் கூட்டமாக கிளம்பிய காரணம்? அய்யனாரை போல காவல் காக்கும் போலீஸ்

x

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராமத்தில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விரதம் இருந்து திருப்பதி சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இலக்கியம்பட்டி கிராம மக்கள் ஊர்விளையாடி சாமி அழைப்பு நடந்த நிலையில், கிராமத்தை சேர்ந்த ஆயிரம் பேர் திருப்பதிக்கு புறப்பட்டனர். பேருந்து, வேன், கார் என ஏராளமான வாகனங்களில் இருந்து பெரும்பாலான கிராம மக்கள் கிளம்பிச் சென்றதால், கிராமத்தில் முதியோர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் மட்டும் இருந்தனர். இதனால் இலக்கியம்பட்டி கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் 2 நாட்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்