நள்ளிரவில் கேட்ட பெரும் சத்தம்..அடுத்த நொடி பறிபோன உயிர்..கனமழையால் நடந்த துயர சம்பவம் |

x

இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். கேரளா மாநிலம் இடுக்கியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, சாந்தன்பாறை, சேரிப்பாறை பகுதியில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராய் என்பவரின் வீட்டின் மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில், வீட்டில் தனியாக வசித்து வந்த ராய் பலியானார். இந்த நிலச்சரிவில் மேலும் இரண்டு வீடுகள் சேதமடைந்ததுடன், 5 ஏக்கர் ஏலக்காய் தோட்டமும் முற்றிலும் அழிந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்