பக்கத்து வீட்டுக்காரரை நம்பிச் சென்ற சிறுமி..காட்டுப்பகுதியில் குழந்தைக்கு நடந்த கொடூரம்...

x

கேரளா

நாட்டையே உலுக்கிப் போட்ட கொடூரம்...

பாலியல் வக்கிரத்திற்குப் பலியான சிறுமி...

பக்கத்து வீட்டுக்காரரை நம்பிச் சென்ற சிறுமி..

காட்டுப்பகுதியில் குழந்தைக்கு நடந்த கொடூரம்...

ஒரு 5 வயசு குழந்தையோட மரணம், ஒட்டு மொத்த கேரளாவையும் உலுக்கிப் போட்டிருக்கு. பக்கத்து வீட்டுக்காரர்னு நம்பி வந்த குழந்தைய, கொஞ்சம் கூட இறக்கமே இல்லாம சிதச்சி போட்டிருக்கு ஒரு மனித மிருகம். இதயத்தை நொறுங்க வைக்குற இந்த சம்பவத்தோட பின்னணி என்ன..?

பள்ளி வாகனத்தில் வீட்டுக்கு வந்து இறங்க வேண்டிய குழந்தையை, சடலமாக ஆம்புலன்ஸில் அள்ளி வந்திருக்கிறார்கள்.

எந்த இடத்தில் அந்த பிஞ்சுக் குழந்தை துள்ளி விளையாடிக் கொண்டிருந்ததோ, அதே பள்ளி வளாகத்தில் சிறுமியின் உடல் இறுதி அஞ்சலிக்ககா வைக்கபட்டிருந்தது.

அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கனத்த இதயத்தோடு கடந்து சென்றனர்.


குற்றவாளியை கைது செய்த போலீசாரால், அந்த குழந்தையிடம் மண்ணிப்பு மட்டுமே கேட்க முடிந்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா பகுதியில் வசித்து வந்தவர் மஜ்ஜய் குமார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன்னதாக வேலை தேடி கேரளாவுக்கு வந்திருக்கிறார்.

தனது மனைவி, மற்றும் 5 வயது குழந்தை சாந்தினியோடு 4 வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

சொந்த ஊரை விட்டு புலம்பெயர்ந்து வந்த இவர்கள் அந்த பகுதியில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். குறைந்த வருமானம் வந்தாலும் மஜ்ஜய் குமார் தனது மகள் சாந்தினியை அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.

கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் நேரத்தில் , குழந்தை சாந்தினி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அப்படித்தான் சம்பவம் நடந்த அன்று பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட, பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறது.

கணவன் மனைவி இருவரும் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வீட்டில் சாந்தினி இல்லை. அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்திருக்கிறார்கள். ஆனால், எங்கும் சாந்தினி கிடைக்கவில்லை.

இருள் சூந்து கொண்டே இருக்க அச்சத்தில் உரைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். சற்றும் தாமதிக்காமல் அடுத்த கணமே போலீசாரின் தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறது.

சாந்தினி வீட்டிற்கு அருகே உள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்திருக்கிறார்கள். சாந்தினியை ஒரு இளைஞர் அழைத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது.

உடனே அந்த கட்சிகளை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி விசாரித்திருக்கிறார்கள்.

சாந்தினியை அழைத்து சென்றது வேறு யாருமில்லை, அவர்களது வீட்டின் மேல் தளத்தில் தங்கி இருக்கும் அஸபாக் ஆலம் என்று தெரிய வந்திருக்கிறது.

இவரும் பீகார் மாநிலத்தில் இருந்து கேரளாவில் புலம் பெயர் தொழிலாளராக வேலை பார்த்து வருபவர் தான்.

உடனே போலீசார் ஆலுவா பகுதியில் வைத்து அஸபாக் ஆலமை பிடித்து வந்து விசாரித்திருகிறார்கள். ஆனால் முழு போதையில் நிதானமில்லாமல் இருந்த அஸபாக் ஆலமிடமிருந்து எந்த தகவலையும் போலீசாரால் முழுமையாக வாங்க முடியவில்லை.

இதனால் மீண்டும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறார்கள். அப்போது ஆலுவா மார்கெட் பகுதியில் அஸபாக் ஆலம் காணாமல் போன குழந்தையோடு சென்றதை ஒருவர் பார்ததாக தகவல் கொடுத்திருக்கிறார்.

உடனே அவரிடம் விசாரித்திருக்கிறார்கள். சாந்தினியை தூக்கிக் கொண்டு மார்கெட்டுக்கு பின்புறம் அஸபாக் ஆலம் சென்றிருக்கிறார். அதை பார்த்து சந்தேகமடைந்த ஒருவர் தடுத்து நிறுத்தி விசாரித்த போது. இது என்னுடைய மகள் , நான் அவளுக்கு அப்ப எனச் சொல்லி அங்கிருந்து நழுவி இருக்கிறார் அஸபாக் ஆலம்.

இந்த தகவல் கிடைத்த அடுத்த நொடி நடந்த காட்சிகள் தான் இவை அனைத்தும்..


பொதுமக்கள் பீதி நிறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருக்க, குப்பை மேட்டுக்குள் இருந்து சாந்தினியை சடலமாக மீட்டிருக்கிறார்கள். அடிபட்ட காயங்களோடு கிடந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அந்த உடற்கூராய்வின் முடிவு, நடந்த பயங்கரத்திற்கான காரணத்தை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.

கொல்லப்படுவதற்கு முன் அந்த பிஞ்சுக்குழந்தை கொடூரமாக பாலியல் வல்லூரவுக்கு ஆளாக்கபட்டிருபது தெரிய வந்த அடுத்த நொடி, ஒட்டுமொத்த கேரளாவும் கொதிப்பின் உச்சத்திற்கே சென்றிருக்கிறது.

மறு நாள் காலை போதை தெளிந்ததும் அஸபாக் ஆலம் அவர் செய்த பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

வீடில் தனியாக இருந்த குழந்தையை கடத்திக் கொண்டு போன அஸபாக் ஆலம், ஆள் அரவமற்ற பகுதியில் வைத்து கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் துடிக்க துடிக்க தனது பாலியல் வக்கிரத்திற்கு இறையாக்கி இருக்கிறார்.

அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. சிறுமியின் முகத்தை சேற்றில் அழுத்தில் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் அஸபாக் ஆலமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

நடந்த கொடூரத்தை தக்கிக் கொள்ளாத கேரள மக்களின் கண்ணீருக்கு மத்தியில் சிறுமி சாந்தினியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.




Next Story

மேலும் செய்திகள்