கடைசியாக ஒருமுறை வீட்டிற்கு வந்த கணவர் - யோசிக்காமல் உயிரை விட்ட மனைவி

x

டெல்லி காசியாபாத் நகரைச் சேர்ந்த அபிஷேக் ஆலுவாலி என்ற இளைஞருக்கும், அஞ்சலி என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகளான இருவரும், டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்றபோது, அபிஷேக் திடீரென நெஞ்சை பிடித்தபடி சாய்ந்துள்ளார். பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வீட்டில் அபிஷேக்கின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவி கதறி அழுதபடியே 7வது மாடியிலிருந்து கீழே குதித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்