சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த SI-யை அடித்து துவைத்து தொங்க விட்ட மக்கள்

x

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள ராகுவாஸ் காவல்நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூபேந்திர சிங். இவர் 4 வயது சிறுமியை, தனது அறைக்குள் இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் பரவியதை அடுத்து, காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள், போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, காவல் துணை ஆய்வாளர் பூபந்திர சிங்கையும் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக காவல் துணை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்