நொடியில் வெடித்த மேகம்.. கருணையின்றி அடித்த கனமழை - வெள்ளத்தில் மிதந்த ராணுவ வீரர்களின் உடல்கள்

x

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, 9 ராணுவ வீரர்களின் உடல்கள் உட்பட இதுவரை 32 உடல்கள் சேறும் சகதியுமாக மீட்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை அதிகாலை சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பால் பலத்த மழை பெய்தது. இதனால், அங்கு பாயும் தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தால் அங்குள்ள சுங்தாங் பகுதியில் நீா்மின் திட்ட அணை உடைந்தது. இதனைால் மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது. 30 நிவாரண முகாம்களில் 6 ஆயிரத்து 875 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரா்கள் காணாமல் போன நிலையில், ஒருவா் உயிருடன் மீட்கப்பட்டாா். தற்போது வரை, 9 ராணுவ வீரர்களின் உடல்கள் உட்பட 32 உடல்கள் சேறும் சகதியுமாக மீட்கப்பட்டுள்ளன.இன்னும்100 பேரை காணவில்லை என்பதால், தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்