பள்ளி மாணவர்கள் முகத்தில் தெரிந்த மாற்றம்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

x

ஹைதராபாத்தில் உள்ள ரங்காரா மாவட்டம் கொத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படித்து வரும் மாணவர்களின் நடவடிக்கையில் சமீப நாட்களாக மாற்றங்கள் தெரியவர, இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளிக்கூடம் அருகில் இருக்கும் பீடா கடை மூலம் மாணவர்களுக்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்த ஆசிரியர்கள் போலீசில் புகாரளித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளிக்கூடம் அருகேயிருந்த பீடா கடையில் சோதனை நடத்திய நிலையில், அங்கிருந்து ஏராளமான போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்