குழந்தைகளோடு நின்று கொண்டிருந்த கார்..எமனாக பறந்து வந்த ராட்சத பாறை - உயிர் பலி.படுகாயம்..பயங்கரம்

x

கேரள மாநிலம் இடுக்கியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, பாறை விழுந்த‌தில் பெண் ஒருவர் உயிரழந்தார். கொட்டாரக்கரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்ச்சாலையில் குட்டிக்கானம் என்ற இடத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, மலை உச்சியிலிருந்து மண்திட்டுடன் மிகப்பெரிய பாறை சரிந்து காரின் மீது விழுந்தது. இதில் காரில் இருந்த சோமினா என்ற 67 வயது பெண் உயிரிழந்தார். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், படுகாயமடைந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேரை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்