கோர தாண்டவமாடிய `இயற்கை' - உயிருக்கு போராடிய 300க்கும் மேற்பட்டோர் - ஹீரோவாக மாறிய Police

x

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் சுரங்கப்பாதையில் சிக்கிய 300 சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குல்லு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அங்கு உள்ள Atal சுரங்கப்பாதையின் தெற்கு பகுதி பனியால் சூழ்ந்த‌து. இதனால், சுரங்கப்பாதையில் பயணித்த ஏராளமான வாகனங்கள் சிக்கின. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். அரசு பேருந்து உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்