நாட்டையே அதிர விட்ட குண்டுவெடிப்பு - வெளிவந்த அடுத்த சிசிடிவி காட்சி

x

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், குற்றவாளிகள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருக்கும் சிசிடிவி வெளியிடப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், வெடி குண்டு வைத்த முசாவிர் ஹூசைன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவரையும் கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் கொல்கத்தாவின் இக்பால் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், போலி ஆவணங்களை காட்டி அறையெடுத்து தங்கியிருந்தது தெரியவர, தற்போது அவர்கள் இருவரும் ஹோட்டலில் இருக்கும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்