`கெஜ்ரிவால் போட்ட மனு' - அமலாக்கத் துறைக்கு பறந்த உத்தரவு

x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 6 நாள் அமலாக்கத்துறை காவல் விதித்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், கைதுக்கு எதிராகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், கெஜ்ரிவாலின் மனுவுக்கு, ஏப்ரல் 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, அமலாக்கத் துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்